Saturday 24 January 2015

மெனிஞ்சியோமா - கணேச குமாரன்

கணேச குமாரன், வண்ணநிழலன் வேதாளத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு ஞாயிறு வேளையின் கொடும் இலக்கியப் பசியைத் தீர்த்துக் கொள்ள அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது கணேச குமாரனின் 'பைத்திய ருசி' சிறுகதைத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளை ருசித்துப் பார்க்கச் சொன்னார். அந்த அனுபவத்தை முழு தொகுப்பையும் வாசித்து விட்டு எழுதுகிறேன். 'பைத்திய ருசி' கடந்த ஆண்டிற்கான(2014) விகடன் விருதை வென்றது. கணேச குமாரனின் ‘மெனிஞ்சியோமா’ என்றொரு நாவல் வெளிவரப்போவதாகவும், இந்தப் புத்தகக் கண்காட்சியில் அதைத் தவறவிட வேண்டாமென்றும் சொல்லியிருந்தார்.

பொதுவாக ஒரு நாவலை அணுகும் முன் முன்னுரை வாசிப்பதை தவிற்க வேண்டுமென்பது என் அனுபவத்தின் மூலம் கற்றுணர்ந்தது. நம் வாசிப்பனுபவத்தை அது சிதைத்துவிட வாய்ப்புண்டு. அதுவே நாவல் வாசித்து முடித்த பின், முன்னுரையை வாசிக்கும் போது வேறொரு பெர்ஸ்பெக்டிவ் கிடைக்கும். அதனாலேயே எப்போதும் நாவல் வாசித்து முடித்த பின் முன்னுரையும் அந்த நாவலைப் பற்றி பிறர் எழுதிய பதிவையும் வாசிப்பது வழக்கம். ஆனால் ‘மெனிஞ்சியோமா’ என்றொரு வார்த்தையைப் பற்றி இதற்கு முன் அறிந்திராததால் முன்னுரை வாசிக்க நேர்ந்தது. நேசமித்திரனின் ஆழமான முன்னுரை. இருந்தும் அவர் நடை ஏனோ ஒட்டவில்லை. வாசிப்பதற்கு சிரமாக இருந்தது. அவர் முன்னுரையை வாசித்து புரிந்து கொள்ளும் நேரத்தில் நாவலை முடித்துவிடலாம் போல தோன்றியது. நாவலை வாசிக்கத் தொடங்கவும் கணேச குமாரனின் நடை, சோர்ந்திருந்த நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. ஆனால் குதூகலமான நாவல் அல்ல. முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வலி. ரண வலி.

சந்துருவிற்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கின்றது. நாவலில் இரத்தமும் சீழும் மூத்திரமும் மலமும் கண்ணீரும் வலியும் ஆஸ்பத்திரியின் வாசமும் நிறைந்திருக்கின்றன. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கும் சந்துருவுடன் தந்தை காளிதாஸ் இருக்கிறார். சந்துருவின் வலியை விட அவன் அருகிலிருந்து அவன் கஷ்டப்படுவதைப் பார்க்கும் தந்தையின் வலி சொல்லி மாளாது. சந்துரு காளிதாசின் வலிகளை இந்த நாவல் காட்டுகிறது என்று சொன்னாலும், தந்தை தன் மகனின் மீதுள்ள பாசத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இந்நாவலில்.

சந்துருவுக்கு ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும் போது அங்கிருக்கப் பிடிக்காமல் அருகிலிருக்கும் சர்ச்சினை நோக்கி தந்தை ஓடுகிறார்.

பிறந்து ஏழாவது மாதத்தில் அம்மாவை இழந்த சந்துரு அதன் பின்னான நாட்களில் தன் அணைப்பில் உறங்கும்போது பாலுக்கு ஏங்கிய சந்துருவின் கைகளும் வாயும் அம்மாவின் நினைவாக தன்னிச்சையாக தன் மார்பினில் காம்பினைத் தேடிய ஞாபகம் வந்ததும் தரையில் மண்டியிட்டிருந்த காளிதாஸ் வெடித்தழத் தொடங்கினார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

இன்னொரு சோறு –

ஆபரேஷன் முடிந்து சந்துரு வெளிவரும்போது...

காளிதாஸ் சந்துருவை நெருங்கும்போதுதான் கவனித்தார், ஸ்ட்ரெக்சர் அருகிலேயே ஒருவன் ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தள்ளிக்கொண்டு வந்ததை. சந்துருவின் தலையயைச் சுற்றி மெல்லிய வெள்ளைநிற பேண்டேஜ் துணி சுற்றப்பட்டு அதன் மறு இரு முனைகளும் அவன் கழுத்துக்குக் கீழே இணைத்து முடிச்சிடப்பட்டிருந்தது. முகத்தின் மீது மாஸ்க். வலதுகை நரம்பில் ஒரு சலைன் பாட்டில் இறங்கிக்கொண்டிருக்க இடதுகையிலும் அதேபோல். அவன் கால் பாததுக்கு மேல் உள்ள நரம்பில் ஒரு வென்ஃப்லான் செட் பொருத்தப்பட்டு அங்கும் ஒரு பாட்டில். சந்துரு தலையிலிருந்து ஒரு டியூப் வெளியே வந்து அதன் மறுமுனை பம்ப் செய்யப்படும் ப்ளாஸ்டிக் டப்பா ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தது.

அவன் மார்பின் இரு காம்புகளின் மீதும் ஈ.சி.ஜி எடுப்பதற்காக ஒட்டப்படும் எலெக்ட்ரொடெஸ் ரப்‌பர் அடையாளங்கள். காளிதாசின் காலின் கீழ் உலகம் நடுங்கியது. "ஐ.சி.யூனிட் கொண்டு போறோம். அங்க வந்து பாத்துகுங்க" என்றபடி ஸ்ட்ரெக்சர் தள்ளிக்கொண்டு சென்றவர் சொல்ல பின்னாலே ஒரு நர்ஸ் ஏகப்பட்ட ஃபைல்களில் அடங்கிய குறிப்பேடுகளை எடுத்துக்கொண்டு விரைந்தார். இரு கைகளாலும் முகத்தை ஓங்கி அறைந்தபடி காளிதாஸ் அந்த பிள்ளையார் கோவில் நோக்கி ஓடினார்.

யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். விலை ரூ.80/-


நாவலில் சந்துருவின் நண்பர்களோ உறவினர்களோ இல்லை. இது மட்டும் குறையாகத் தோன்றியது. இந்தத் நாவலுக்கு தேவை இல்லையென்றாலும் இது போன்ற எண்ணம் வருபவர்களுக்காக ஒரு வரி இணைத்திருந்தார் 'அவர்களுக்கென்று யாருமில்லை' என்று. அந்த வரியை மட்டுமாவது தவிர்த்திருக்கலாம்.

எல்லாருக்குமே கடைசி காலத்தில் நோய்வாய்பட்டு சின்னாபின்னமாவதை விட தூக்கத்திலே சுலபமாக உயிர் போக வேண்டுமென்ற ஆசை இருக்கும். சந்துருவும் இந்தத் துன்பதிலிருந்து நிரந்தர விடுதலை பெறவே எண்ணுகிறான். சாக முயன்று, உயிர் போகாமல் அது இன்னும் கூடுதல் துன்பத்திற்கு ஆளாக்கி, அதன் பின் அவன் தன் தந்தையை எதிர்கொள்ளும் இடங்களிலெல்லாம் நம் இதயம் கணக்கின்றது. அவன் தாகத்திற்கு தண்ணீர் கேட்கும் சமயத்தில், குறிப்பிட்ட நேரம் வரை தண்ணீர் தரக்கூடாது என்று நர்ஸ் மறுக்கவும், அவன் தாகம் தணிக்க கிளிப் மாட்டப்பட்டிருக்கும் விரல்களால் தன் சிறுநீரைத் தொட்டு உதட்டை ஈரப்படுத்தும் போது யாருடைய இருதயமும் ஒரு கணம் துடிக்க மறுக்கும்.

கணேச குமாரனின்  ஒவ்வொரு வரியிலும் வலியை உணர முடியும். உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் எவராலும் இந்த நாவலை அவ்வளவு அசாத்தியமாக கடந்துவிட முடியாது.

- த.ராஜன்

Monday 19 January 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2015 – நான் வாங்கிய புத்தகங்கள்

வண்ணநிழலன் வேதாளம் - இவர் ஒரு படைப்பை அணுகும் விதத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். எனது வாசிப்புலகின் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றத்தில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. நான் சில புத்தகங்களை அவருக்கு பரிந்துரைப்பதும் அவர் சில புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பதும் என இம்முறை அலாதியான அனுபவம். அவரின் மூலமாக நிறைய ஃபேஸ்‌புக்/ட்விட்டர் நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி அர்ஜூன்.

இம்முறையும் வாங்கவேண்டுமென்று நினைத்திருந்த பட்டியல் வேறு வாங்கியவை வேறு. நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

நாவல்கள்:
·         கன்னி (இரண்டாம் பதிப்பு) - ஃப்ரான்சிஸ் கிருபா - தமிழினி
·         கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் - தமிழினி
·         தேவதூதனின் கவிதைகள் - எச்.முஜீப் ரஹ்மான் - புதுப்புனல்
·         வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம் - காலச்சுவடு
·         ஆட்கொல்லி - க.நா.சு - விருட்சம்
·         நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் - தமிழினி
·         வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழினி
·         மெனிஞ்சியோமா - கணேசகுமாரன் - யாவரும்
·         பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு - காலச்சுவடு
·         ஆத்துக்குப் போகணும் - காவேரி - காலச்சுவடு
·         இடாகினிப் பேய்களும் நடைபிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் - கோபிகிருஷ்ணன் - தமிழினி
·         பால்கனிகள் - சு.வேணுகோபால் - தமிழினி
·         கூந்தப்பனை - சு.வேணுகோபால் - தமிழினி
·         ஊழிக்காலம் - தமிழ்க்கவி - தமிழினி
·         உளவுக்கோப்பை கிரிக்கெட் - தரணி - கிழக்கு
·         சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான் - காலச்சுவடு
·         காடோடி - நக்கிரன் - அடையாளம்
·         நவீனன் டைரி - நகுலன் - காவ்யா
·         தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - விஜயா
·         தலைமுறைகள் - நீலபத்மநாபன் - காலச்சுவடு
·         பள்ளிகொண்டபுரம் - நீலபத்மநாபன் - காலச்சுவடு
·         புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன் - காலச்சுவடு
·         வெக்கை - பூமணி - காலச்சுவடு
·         கூளமாதாரி - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         ஆளண்டாப்பட்சி - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         ஆலவாயன் - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         அர்த்தநாரி - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         ஏறுவெயில் - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         கங்கணம் - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         கனவில் பெய்த மழையப் பற்றிய இசைக் குறிப்புகள் - ரமேஷ்:பிரேம் - புதுப்புனல்
·         நாடோடித்தடம் - ராஜ சுந்தரராஜன் - தமிழினி
·         வாக்குமூலம் - நகுலன் - 15 ரூபாய் (ஏற்கனவே இந்தப் புத்தகம் என்னிடம் இருந்த போதிலும் அந்த காலத்து பதிப்பென்பதால் வாங்கினேன்)
·         பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் - தமிழினி
·         கொற்றவை - ஜெயமோகன் – தமிழினி
·         நிழல்முற்றம் – பெருமாள்முருகன் – காலச்சுவடு
·         காதுகள் - எம்.வி.வெங்கட்ராம் – காலச்சுவடு
·         ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன் – நற்றிணை
·         அன்பின் வழியதுஉயிர் நிழல் - பாதசாரி – தமிழினி

சிறுகதைத் தொகுப்புகள்:
·         பூரணி பொற்கலை - கண்மணி குணசேகரன் - தமிழினி
·         பெருந்திணைக்காரன் - கணேசகுமாரன் - உயிர் எழுத்து
·         பைத்தியருசி - கணேசகுமாரன் - தக்கை
·         சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள் - காலச்சுவடு
·         களவு போகும் புரவிகள் - சு.வேணுகோபால் - தமிழினி
·         வெண்ணிலை - சு.வேணுகோபால் - தமிழினி
·         திசையெல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால் - தமிழினி
·         வீடென்ப - தேவிபாரதி - காலச்சுவடு
·         கந்தர்வன் கதைகள் - தொகுப்பு: பவா செல்லதுரை - வம்சி
·         சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி
·         அந்தக் கதவு மூடப்படுவதில்லை - பிரபஞ்சன் - நற்றிணை
·         வேப்பெண்ணைய் கலயம்  - பெருமாள் முருகன் - காலச்சுவடு
·         சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ் - உயிர்மை
·         புனைவின் நிழல் - மனோஜ் - உயிர்மை
·         அருகில் வந்த கடல் - மு.குலசேகரன் - காலச்சுவடு
·         மயான காண்டம் - லக்ஷ்மி சரவணக்குமார் - உயிர்மை
·         முதல் தனிமை - ஜே.பி.சாணக்யாகாலச்சுவடு
·         மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து
·         வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து
·         யாக்கை - லக்ஷ்மி சரவணக்குமார் -உயிர் எழுத்து
·         பூமிக்குள் ஓடுகிறது நதி - சு.வேணுகோபால் - தமிழினி

மொழிபெயர்ப்பு நூல்கள்:
·         அந்நியன் - ஆல்பெர் காம்யூ - தமிழில்: ஸ்ரீராம் - க்ரியா
·         பனி - ஓரான் பாமுக் - தமிழில்: ஜி.குப்புசாமி - காலச்சுவடு
·         காதலின் துயரம் - கதே - தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன் - தமிழினி
·         ஃப்ரான்ஸில் இட்டிக்கோரா - ட்டி.டி.ராமகிருஷ்ணன் - தமிழில்: குறிஞ்சிவேலன் - உயிர்மை
·         மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன் - தமிழில்: ஆனந்த் - காலச்சுவடு
·         சூதாடி - தஸ்தொவஸ்கி - சாமிபுக்ஸ்
·         குள்ளன் - பர்லாகர் க்விஸ்ட் - தமிழில்: தி.ஜானகிராமன் - தையல்
·         மீஸான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லா - தமிழில்: குளச்சல் மு. யூசுப் - காலச்சுவடு
·         அன்பு வழி - பெர் லாகர்குவிஸ்ட் - தமிழில்: க.நா.சு - ..சி நூலகம்
·         ஆடுஜீவிதம் - பென்யாமின் - தமிழில்: ராமன் - உயிர்மை
·         தாய் - மக்சீம் கார்க்கி - தமிழில்: ரகுநாதன் - பாரதி
·         காதல் தேவதை - மாஸோ - தமிழில்: ஜெகதீஷ் - யுனைட்டெட் ரைட்டர்ஸ்
·         திருடன் மணியன்பிள்ளை - ஜி ஆர் இந்துகோபன் - தமிழில்: குளச்சல் மு. யூசுப்காலச்சுவடு
·         அன்னை - கிரேஸியா டெலடா - தமிழில்: தி.ஜானகிராமன்
·         உருமாற்றம் – காஃப்கா - தமிழில்: ஆர்.சிவகுமார்
·         மனப்பிராந்தி - செகாவ் - தமிழில்: க.ரத்னம்

கட்டுரைகள் & கவிதைகள்:
·         நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் - எம்.ஆர்.ராதா/விந்தன் - ..சி நூலகம்
·         புதுக்கவிதைகள் - .நா.சு - 24 ரூபாய் (கவிதை)
·         புல்வெளியைத் தேடி - மகாதேவன் - காலச்சுவடு
·         காமக்கடும்புனல் - மகுடேசுவரன் - யுனைட்டெட் ரைட்டர்ஸ் (கவிதை)
·         ருத்ரப்பிரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை - ஜிம் கார்பெட்(தஞ்சாவூர்க்கவிராயர்) – காலச்சுவடு (வேட்டை அனுபவம்)
·         நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை - வெள் உவண்

காலச்சுவடு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தின் விலையில் பாதி விலைக்கு இலவசமாக புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். அதில் அள்ளியவை:
·         ஒருத்தி திரைக்கதை வசனம் - அம்ஷன் குமார் - காலச்சுவடு (திரைக்கதை-வசனம்)
·         புதிய சலனங்கள் - காலச்சுவடு சிறுகதைகள் - காலச்சுவடு (சிறுகதை)
·         பிள்ளை விளையாட்டு - குவளைக் கண்ணன் - காலச்சுவடு (கவிதை)
·         காலமும் நெருப்புத்துண்டங்களும் - கோகுலக்கண்ணன் - காலச்சுவடு (சிறுகதை)
·         மரம் பூக்கும் ஒளி - கோகுலக்கண்ணன் - காலச்சுவடு (கவிதை)
·         இரவில் நான் உன் குதிரை - சில தேசங்களின் சிறுகதைகள் - காலச்சுவடு (சிறுகதை)
·         உப்புநீர் முதலை - நரன் - காலச்சுவடு (கவிதை)
·         ராஜன் மகள் - பா. வெங்கடேசன் - காலச்சுவடு (சிறுகதை)
·         எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - பாலை நிலவன் - காலச்சுவடு (கவிதை)
·         பறவையிடம் இருக்கிறது வீடு - பாலை நிலவன் - காலச்சுவடு (கவிதை)
·         ஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன் - காலச்சுவடு (கட்டுரை)
·         கலி புராணம் - மு தளையசிங்கம் - காலச்சுவடு (நாவல்)
·         மௌனப்பனி ரகசியப்பனி - மொழிபெயர்ப்புக் கதைகள் - காலச்சுவடு (சிறுகதை)
·         ஈதேனின் பாம்புகள் - றஷ்மி - காலச்சுவடு (கவிதை)

தோழியிடமிருந்து...

·         கூனன் தோப்பு - தோப்பில் முகமது மீரான் – அடையாளம்

தோழனிடமிருந்து...

·         கோபிகிருஷ்ணன் படைப்புகள் - தொகுப்பு: சி.மோகன் - நற்றிணை
·         பூமணி நாவல்கள் - பூமணி - நற்றிணை

இந்த ஆண்டு பதினைந்தாயிரம் பக்கங்கள் மற்றும் தினம் ஒரு சிறுகதை என முன்னூறு சிறுகதைகள் வாசிக்கவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். இலக்கியக் கடவுள் அருள் புரிவாராக.

- த.ராஜன்